search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்
    X

    கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

    • 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
    • மாற்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள்காட்டினார்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி நிறுவனங்கள், இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) காரைக்கால் நிதி பங்களிப்புடன் கூடிய சர்வதேச அளவிலான கருத்தரங்கம் எதிர்கால சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த தலைப்பில் நடை பெற்றது.

    கருத்தரங்கை ஓ என் ஜி சி நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ராஜசேகரன், நேதாஜி கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், இயக்குநர் விஜயசுந்தரம் , ஆலோசகர் ஜான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன்,ஆராய்ச்சி துறைத்தலைவர் கணேசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் முனைவர் ரகுநாதன் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சுமார் 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த சில முக்கிய பதிவுகளையும் எதிர் காலத்தின் சக்தி அமைப்பின் வரைகோலையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓ எம் ஜி சின் பிரதி பொது முகாமை யாளர் ராஜசேகரன் எடுத்துரைத்தார்.

    மேலும், மாற்று புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள் காட்டினார்.

    மேலும் கல்வி குழுமங்களின் தாளாளர் முனைவர் வெங்கட்ராஜிலு செயலர் சுந்தர்ராஜ் ஆகியோரின் உத்தரபடி விழாவின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கணேசன், அனைத்து துறை சார்ந்த துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×