search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் வரும் 26ந் தேதி நடைபெறும், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வுள்ளது. என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அறிவித்துள்ளார். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில், வரு கின்ற 26-ந் தேதி, காரைக் காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வருகிற 26-ந் தேதி, காரைக்காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படு கிறது. காரைக்கால் மாவட்டத்தில், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது நமது கடமை. அன்றையதினம் பொது மக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம், பேரணி உள்ளிட்ட வைகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பது சம்பந்தமாக விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும். இது குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி களும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம் என்றார்.

    கூட்டத்தில் பயிற்சி கலெக்டர், துணை கலெக்டர் பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவ்ஹால் ரமேஷ் மற்றும் நலவழித்துறை, சுகாதா ரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, காரைக் கால் நகராட்சி ஆணையர் மற்றும் கொம்யூன பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×