search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு
    X

     அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆய்வு செய்த காட்சி.

    வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு

    • சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையும் முறையில் பணியாற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆலோசனைகள் வழங்கினார்.

    செய்துங்கநல்லூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்து சட்ட விதிக ளுக்கு உட்பட்டு பணியினை சிறப்பாக செய்திட பொறி யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பார்வை யிட்டு பணிகளை விரை வாக முடித்திட அறிவுறுத்தி னார். கட்டிடத்தினை நோயா ளிகளின் பயன் பாட்டிற்கு முறையாக பயன்படுத்தவும் அறிவுறுத்தி னார்.

    மேலும் சுகாதார நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அப்பொழுது தாய்சேய் நல சேவைகளை திறம்பட செய்தி டவும், சுகப் பிரசவ ங்களை அதிகரிக்க வும், ரத்தசோகை உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அயன் சுக்ரோஸ் சிகிச்சை முறையாக வழங்கிடவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையும் முறையில் பணியாற்றவும் ஆலோ சனைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், உதவி திட்ட மேலாளர் டாக்டர் பொன் பத்மநாபன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் நேர்முக உதவி

    Next Story
    ×