search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்களில் ஆய்வு
    X

    ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்களில் ஆய்வு

    • வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
    • சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.

    திசையன்விளை:

    தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்கு சாவடிகளில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார். அந்த வாக்குச்சாவடிகளில் புதிதாக சேர்ந்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் மற்றும் நீக்கல் குறித்த தகவ ல்களை கேட்டறிந்தார். முகாமிற்கு மக்கள் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.

    இதில் தி.மு.க. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளருமான சுரேஷ் மனோகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் அருள், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி எஸ்தாக் கெனிஸ்டன், சொக்கலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், ஒன்றிய துணை செயலாளர் கென்னடி, நவலடி சரவணகுமார், பொன்னி சக்கி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×