search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தோ-நேபாள சர்வதேச யோகா போட்டி-ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளிக்கு வெள்ளிப் பதக்கம்
    X

    இந்தோ-நேபாள சர்வதேச யோகா போட்டி-ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளிக்கு வெள்ளிப் பதக்கம்

    • இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி பொக்ராவில் நடைபெற்றது.
    • போட்டியில் கலந்து கொண்ட பாலந்த ரத்திஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    தென்காசி:

    நேபாள நாட்டில் உள்ள பொக்ராவில் இந்தோ-நேபாள சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட தபிசா மற்றும் ஐ.சி.எஸ்.எஸ்.பி.இ.- மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் பாலந்த ரத்திஷ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    இம்மாணவர் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் தெற்காசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×