search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டராடூன் இந்திய ராணுவ கல்லூரியில்  சிறுவர், சிறுமிகள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு
    X

    டராடூன் இந்திய ராணுவ கல்லூரியில் சிறுவர், சிறுமிகள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு

    • இணையவழி மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.
    • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    டேராடூன் இந்திய ராணுவ கல்லூரியில் சிறுவர், சிறுமிகள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு நடைபெற ள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2023-ம் ஆண்டு பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களை கொண்டதாகும்.

    நேர்முகத் தேர்வு அறிவுக் கூர்மை மற்றும் தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    விண்ணப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட் 248003 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு எண். 01576) செலுத்தத்தக்க வகையில் பொது பிரிவினருக்கு ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.555 கேட்புக் காசோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இணையவழி மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.

    விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    மேலும், 1.1.2011-ம் தேதிக்கு முன்னதாகவும், 1.7.2012-ம் தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்க கூடாது. சேர்க்கையின் போது 1.1.2024-ம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுபபு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்திய செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை - 600003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையத்தளத்தை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×