search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தின அமுதப் பெருவிழா   விழிப்புணர்வு வாகன பேரணி
    X

    சுதந்திர தின அமுதப் பெருவிழா விழிப்புணர்வு வாகன பேரணி

    • 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா வாகன பேரணி நடைபெற்றது.
    • இந்த ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பி–யன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலத்தில் போலீசார் மற்றும் பொது–மக்கள் கலந்துகொண்ட 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா வாகன பேரணி நடைபெற்றது. தாரமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு இருந்து டி.எஸ்.பி. சங்கீதா தொடங்கி வைத்தார்.

    பேரணி அண்ணாசிலை, தேர்நிலையம், காமராஜர் சிலை, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் 100 இருசக்கர வாகனங்களும், 10 நான்கு சக்கர வாகனங்களும் தேசிய கொடிகளை கட்டியவாறு அணிவகுத்து சென்றது. இந்த ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பி–யன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×