search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
    X

    ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

    • சேலத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் இன்று வந்தனர்.
    • மக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு சேலம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான தருமபுரி, நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா,

    சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காணப்பட்டனர்.

    பொதுவாகவே வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். தற்போது அதி களவில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவதால் ஏற்காடு களைகட்டியுள்ளது. இங்குள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.

    Next Story
    ×