search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் வட்டார பகுதிகளில் சீதாப்பழம் வரத்து அதிகரிப்பு
    X

    விற்பனைக்கு குவிந்துள்ள சீதாப்பழங்கள்.

    ஓமலூர் வட்டார பகுதிகளில் சீதாப்பழம் வரத்து அதிகரிப்பு

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது.
    • இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு சிறு கரடுகள் குன்றுகள் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கரடு பகுதியில் சிறு குன்று பகுதியில் மற்றும் தோட்டங்களில் ஓரங்களில் அதிகளவில் சீத்தா மரங்கள் உள்ளன.

    இதில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் அதிகளவில் சீத்தாப்பழம் விளைச்சல் கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து சின்ன திருப்பதி பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    ஒரு கிரேடு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இங்கு அறுவடை செய்யப்படும் சீத்தா பழங்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு சீதாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×