என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் சுற்றுவட்டார் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மரவள்ளிகிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை உயர்வு அடைந்துள்ள தால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.9ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ள தால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை, மோகனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மரவள்ளிகிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை உயர்வு அடைந்துள்ள தால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, குப்பி ரிக்கா பாளையம், மணியனூர்,பெருங்குறிச்சி, சுள்ளிப்பாளையம், ஜமீன் இளம்பிள்ளை ,குறும்பல மகாதேவி கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில்,தி. கவுண்டம்பாளையம் ,திடு மல், குன்னமலை, பெரிய மருதூர், சின்ன மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிகிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை ,சின்னசேலம், மல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் செயல்பட்டு வரும் கிழங்குஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
அதேபோல் சில்லறை வியாபாரிகள் மரவள்ளி கிழங்குகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர் . வாங்கிய மரவள்ளிக்கிழங்கை பொது மக்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள தோலை அகற்றி விட்டு சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து பின்னர் தாழித்து சாப்பிடுகின்றனர். சிலர் மரவள்ளிக் கிழங்கில் உள்ள தோலை அகற்றி விட்டு பெரிய ,பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடுகின்றனர்.கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் கேரளா வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல் சேக்கோ சர்வ் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.9ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது.
அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.9ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ள தால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்