search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மனைவியை ஏமாற்றி  இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வருமான வரித்துறை அதிகாரி
    X

    கோவையில் மனைவியை ஏமாற்றி இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வருமான வரித்துறை அதிகாரி

    • இளம்பெண் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை,

    கோவை வடமதுரை அருகே உள்ள கவுண்டன் புதூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

    நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது கணவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். எங்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் எனது கணவர் பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். மேலும், அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த இளம் பெண்ணை அவர் 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

    என்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். எனவே என்னை ஏமாற்றி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×