search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழை
    X

    ஏற்காட்டில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழை

    • சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • ஏற்காட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று கனமழை கொட்டியது. ஏற்காட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் ஏற்காட்டில் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன. இதனால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 30.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆணை மடுவு 11 மில்லி மீட்டர் , கரிய கோவில் 7 என மாவட்டம் முழுவதும் 48.40 பெய்துள்ளது.

    Next Story
    ×