search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிந்தபேரி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா
    X

    புதிய நீர் தேக்கத்தொட்டிகள் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டபோது எடுத்த படம்.

    கோவிந்தபேரி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா

    • கோவிந்தபேரி மற்றும் ராஜாங்கபுரத்திற்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், ஷோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் ஒரு லட்சம் பனை மரங்கள் வளர்ப்பு திட்டம் மற்றும் ராஜாங்கபுரத்தில் ரூ.42 லட்சத்தில் 2 அடுக்குமாடி சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா, கோவிந்த பேரி மற்றும் ராஜாங்கபுரத்திற்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    கலெக்டர் ரவிச்சந்திரன்

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், ஷோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே. பாண்டியன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கடையம் யூனியன் கமிஷனர் திருமலை முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், ஏ.பி. நாடானூர் அழகுதுரை, மந்தியூர் கல்யாண சுந்தரம், பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழ ஆம்பூர் மாரி சுப்பு , ரவணசமுத்திரம் முகமது உசேன், கோவிந்த பேரி பஞ்சாயத்து துணை தலைவர் இசேந்திரன்,ஊராட்சி செயலர் மூக்காண்டி, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராமையா, கடையம் தெற்கு வட்டாரத்தலைவர் முருகன், ஊர் தலைவர்கள் சிங்கக்குட்டி , தட்சிணாமூர்த்தி, சுப்பையா, கிருஷ்ணன், கணேசன், நாகராஜன், மாணிக்கம், மாரியப்பன், பூலோக பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வீட்டுக்கு ஒரு மரம்

    நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் ரவிச்சந்திரன், மரங்கள் இல்லாததால் தான் பருவகால மாற்றங்களினால் மழை பெய்வதில்லை. அனைத்து ஊராட்சிகளிலும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து பஞ்சாயத்து களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். என்றார். மேலும் மரங்கள் வளர்ப்பதினால் உண்டாகும் நன்மைகளையும் எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியின்போது தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் ராஜாங்கபுரம் மற்றும் கோவிந்த பேரியில் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்து கல்வெட்டினை திறந்து வைத்தனர்.

    இதில் முதற்கட்டமாக 10 ஆயிரத்து 8 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

    Next Story
    ×