search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ. 6 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை விற்பனை
    X

    கோப்புபடம்

    வெள்ளகோவிலில் ரூ. 6 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை விற்பனை

    • 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களில் தேங்காய் பருப்பும், சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.72.09க்கும், குறைந்தபட்சம் ரூ.55.16க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.6லட்சத்து 55ஆயிரத்து22 க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×