search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் நகராட்சியில் கழிவுநீர் அகற்ற வாகனங்கள் அனுமதி பெற வேண்டும்- ஆணையர் அறிவிப்பு
    X

    வேதாரண்யம் நகராட்சியில் கழிவுநீர் அகற்ற வாகனங்கள் அனுமதி பெற வேண்டும்- ஆணையர் அறிவிப்பு

    • வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • 30 நாட்களில் நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது;-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை தேசிய கொள்கையின் படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மல கசடு கழிவுநீரைவாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பா டுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் படிவம் பெறபட்ட 30 நாட்களில்நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.

    இதற்கான கட்டணம் ரூ. 2000 உரிமம் பெற்ற வாகனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையா ளர்கள் உடனடியாக உரிமம் பெற்று கொண்டு இயக்க வேண்டும். உரிமை இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் .மேலும் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×