search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள்
    X

    மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தபோது எடுத்த படம்.

    திருச்செங்கோட்டில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள்

    • மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 200- க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்றனர்.
    • போட்டியில் வெற்றி பெற்ற வீரர் -வீரங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி திருச்செங்கோடு குமரமங்கலம் மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    இந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்றனர். சிலம்ப போட்டியை மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் ஸ்டாலின் பாக்கியநாதன் தொடங்கி வைத்தார்.

    வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கோகிலா மற்றும் திருச்செங்கோடு திமுக நகர செயலாளர் தாண்டவன் கார்த்திக்கேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    மேலும் மாவட்ட போட்டியில் வெற்றிபெற்று முதல் இடம் பிடித்த மாணவ -மாணவியர்கள் அனைவரும் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். போட்டியில் வெற்றி பெற்ற வீரர் -வீரங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    விழா முடிவில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் செயலாளர் நவீன்குமார் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×