search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் மேரக்காய் விளைச்சல் அமோகம்
    X

    நீலகிரி மாவட்டத்தில் மேரக்காய் விளைச்சல் அமோகம்

    • கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலையும் கிடைத்து உள்ளது.
    • மேரக்காய் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் கிடைப்பது சிறப்பு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் கக்குச்சி,உயிலட்டி, கூக்கல், நெடுகுளா, எரிசிபெட்டா, இந்திராநகர், வ.உ.சி நகர், கூக்கல்தொரை, மசக் கல்,மானியட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் (சவ்சவ்) பயிரிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. எனவே காய்கறி தோட்டங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்பி, மேரக்காய் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இதற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலையும் கிடைத்து உள்ளது.

    இதனால் விவசாயிகள் உற்சாகமாக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரி காய்கறி மண்டிகளில் மேரக்காய் கிலோவுக்கு ரூ.15, ரூ.16 வரையும் தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இது விவசாயிகளுக்கு போதுமான விலையாக உள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.25முதல் 30 வரை கொள்முதல் விலை கிடைத்தது. அதே போல கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேரக்காய் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் கிடைப்பது சிறப்பு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×