search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நாளை தொடக்கம்
    X

    தஞ்சையில், மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நாளை தொடக்கம்

    • கலை பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • மாலை 6.30 மணிக்கு அருங்காட்சியகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம், சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் கடை கூடத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 4 நாட்களும் எனது பாரம்பரியம் என்ற தலைப்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் தங்கள் கலை பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடைபெறுகிறது .

    நாளை காலை 10 மணிக்கு தஞ்சை கலைக்கூடத்தில் அருங்காட்சியக நடை பயணமும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி காலை 10 மணிக்கு 5-ம் வகுப்பு 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அருங்காட்சியகத்தில் ஓவிய போட்டியும், 20-ந் தேதி காலை 10 மணிக்கு அருங்காட்சியகத்தில் புகைப்பட போட்டியும் நடைபெறுகிறது.

    21-ந் தேதி காலை 10 மணிக்கு சரஸ்வதி மகால் நூலகத்தில் அருங்காட்சியகங்களின் வரலாறு என்ற தலைப்பில் பொது மக்களுக்கான பணிமனையும், மாலை 6.30 மணிக்கு அருங்காட்சியகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கு அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். மேலும் பதிவு மற்றும் விவரங்களுக்கு 9842455765, 9443267422, 9442547682 என்ற எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×