search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதியில்வாழைத்தார் விலை வீழ்ச்சி
    X

    பரமத்திவேலூர் பகுதியில்வாழைத்தார் விலை வீழ்ச்சி

    • பரமத்திவேலூர் பகுதி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.
    • இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, குச்சிபாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், கற்பூரவள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.380-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.320-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.320-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும் விற்பனையானது.

    வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×