search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசத்தில், நாளை சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    பாபநாசத்தில், நாளை சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
    • கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடைய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபா ன்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த சிறுபான்மை யினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்க ப்படவுள்ளது.

    'டாம்கோ மூலம் செயல்ப டுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் பின்வரும் தேதிகளில் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    நாளை ( செவ்வாய் கிழமை) காலை பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 21-ந் தேதி காலை அதிராம்பட்டினம் கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட் அலுவலகத்திலும், 28-ந் தேதி காலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், அடுத்த மாதம் 2-ந் தேதி திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.

    இவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்ப ங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது / செலான் (அசல்)

    Next Story
    ×