search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில்பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை
    X

    நாமக்கல் மாவட்டத்தில்பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

      வருகிற 29-ந் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பநாமக்கல் மாவட்டத்தில்

      பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கைட உள்ளது. விடுமுறை நாட்களில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

      அனைத்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் வந்தால் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

      கோடை விடுமுறையில் பள்ளிகள் நடைபெற்றால் மாணவர்களின் பெற்றோர் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தையும் அல்லது மாவட்ட கல்வி அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      Next Story
      ×