search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொரப்பூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
    X

    கொள்ளயைடிக்கப்பட்ட வீட்டையும், வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் கணாலாம்.

    மொரப்பூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
    • கோவை நகை கடை கொள்ளையன் கைவரிசையா? போலீசார் விசாரணை

    கோவையில் உள்ள பிரபல நகை கடையில் சிறிய துவாரத்தின் வழியாக கடந்த 28- ந்தேதி நுழைந்த வாலிபர் 4½ கிலோ தங்க மற்றும் வைர நகைகளை திருடிச் சென்றார்.

    இதுகுறித்து கோவை தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (வயது 28) என்பது தெரிய வந்தது. ஆனைமலையில் வீட்டில் பதுங்கி இருந்த விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவ ரெட்டியூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தங்க மோதிரம், தங்க பிரேஸ்லெட் உள்ளிட்ட தங்க நகைகளும்,2 செல் போன்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முனிரத்தினம் அவற்றை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து முனிரத்தினத்திடம் விசாரித்து அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் டி.புளி யம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ்(45) என்பவர் விட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கோவை நகை கடையில் திருடிய விஜய், துரைராஜ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டானா? என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகை கடையில் திருடிய விஜய் அந்த மலைப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.இதன் காரணமாக கோவை தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×