லெட்சுமாங்குடியில், வளரும் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 கொடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வளரும் தமிழர் கட்சியினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வளரும் தமிழர் கட்சியினர்.
Published on

மன்னார்குடி:

கூத்தாநல்லூர் அடுத்த லெட்சுமாங்குடி பாலத்தில் இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வளரும் தமிழக கட்சி சார்பில் பட்டியல் வெளியேற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லெட்சுமாங்குடி நகர செயலாளர் முருகபா ண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

திருவாரூர் மாவட்ட செயலாளர் (தெற்கு) சந்திரகுமார் முன்னிலை வகித்தார். மன்னார்குடி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

இதில் சிங்கை சரவண சோழன், ஆரோக்கிய செல்வன், ராஜா, கிட்டு ராஜசேகர், முகிலன், வினேஷ் பாவா ரமேஷ் குமார், கவிதா பழனிவேல், சதாசதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு ேபசினர்.

ஆர்ப்பாட்டத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 என அறிவித்து அனைத்து குடும்ப தலைவிக்கும் கொடுக்காததை கண்டித்தும், சம்பா சாகுபடிக்கு கர்நாடகா அரசிடம் தண்ணீரை பெற்று தராத தி.மு.க அரசை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com