search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்  லாரி-ஆம்னி பஸ் மோதல்
    X

    கள்ளக்குறிச்சியில் லாரி-ஆம்னி பஸ் மோதல்

    • கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்
    • கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48), இவர் மதுராந்தகத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டாரஸ் லாரியை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    இதில் பஸ்சில் வந்த சென்னை சத்யா நகரை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராதா (26), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவகுமார் (36), சேலம் மாதேஸ்வரன் மகள் சத்யபிரியா (23), ரவி மகன் சுதாகர் (27), நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை ராஜூ மனைவி சுமதி (47) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×