search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுக்களின் மறுகட்டமைப்பு தீவிரம்
    X

    கோப்புபடம்

    அரசுப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுக்களின் மறுகட்டமைப்பு தீவிரம்

    • ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும்.

    உடுமலை :

    உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய எஸ்.எம்.சி., குழுக்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஒரு வாரம் முன்பே தகவல் தெரிவிக்கப்படும். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஏற்கனவே நடத்தப்பட்டன.

    இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 உயர்நிலை மற்றும் 76 மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், 12 பெற்றோர் பிரதிநிதிகள், ஒரு ஆசிரியர், தலைமையாசிரியர், கல்வியாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் என 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்படுகிறது.

    பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும். பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, வகுப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, சுற்றுச்சுவர் இல்லை, இரவு பாதுகாவலர் இல்லை, பெண் குழந்தைகளுக்கு இன்சினரேட்டர், சானிட்டரி நாப்கின் வசதியின்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    Next Story
    ×