என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் மொபைல் போன் கடையை சூறையாடிய 2 பேர் கைது
    X

    திண்டிவனத்தில் மொபைல் போன் கடையை சூறையாடிய 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திண்டிவனத்தில் மொபைல் போன் கடையை சூறையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மொபைல் போனுக்கான உபகரணங்கள் இல்லை என கடையில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பெலாக்குப்பம் ரோடு, வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகுமார். இவர், திண்டிவனத்தில் மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சலவாதியைச் சேர்ந்த திகில் என்கிற ஜெகதீசன், மொபைல் போனை சர்வீசுக்கு எடுத்துச் சென்றார். அப்போது, அந்த மொபைல் போனுக்கான உபகரணங்கள் இல்லை என கடையில் இருந்தவர்கள் கூறியு ள்ளனர். இதனால் ஆத்திரம டைந்த திகில் கடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது ஆதரவாளர்கள் மணிகண்டன் மற்றும் 5 பேருடன் சேர்ந்து வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து, கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தப்பியோடினர். ரேணுகுமார் அளித்த புகாரின் பேரில், சஞ்சீவிராயன்பேட்டை மணிகண்டன், கசாமியன் தெருவைச் சேர்ந்த ஆசிப் பாஷா, ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திகில் மற்றும் அடையாளம் தெரியாத சிலரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×