search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தியதை தடுத்த அதிகாரிகளுக்கு  மீனவர்கள் கொலை மிரட்டல்
    X

    சிதம்பரத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தியதை தடுத்த அதிகாரிகளுக்கு மீனவர்கள் கொலை மிரட்டல்

    • சிதம்பரத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தியதை தடுத்த அதிகாரிகளுக்கு மீனவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் மீனவர்கள் அனைவரும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என அரசால் தெரிவிக்கப்பட்டதுஇந்த சுருக்குமடி வலை பயன்படுத்தாத வண்ணம் கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர். சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரை பகுதியில் விசை ப்படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற கடலூர் முதுநகர் மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதின் தலைமையிலான குழுவினர் சந்தேகப்படும் படியாக மீன்பிடித்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் மீனவர்களிடம் சென்று சோதனை செய்தனர்.

    அந்த சோதனையில் இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அக்கறைசேரி பகுதியைச் சேர்ந்த லோகு, பிரகாஷ், வினித் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மணி ஆகிய4 பேரும் மீனவத் துறை ஆய்வாளர் சதுருதீனை தகாத வார்த்தையில் திட்டி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் புது சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×