search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதலூரில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    பூதலூரில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்புகளின் படி உரிய நீரை வழங்க வேண்டும்.
    • காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு கருகும் பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய தலைவர்கள் பாலு, காந்தி, ஆகியோர் தலைமை வகித்தனர்.

    காவிரியின் குறுக்கே மேகதாதில் அணைக்கட்டு முயற்சிகளை கர்நாடக அரசு கைவிட வேண்டும், நீதிமன்ற மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்புகளின் படி உரிய நீரை வழங்க வேண்டும், சட்ட ரீதியான அழுத்தத்தை உருவாக்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் என்.வி. கண்ணன் மாவட்ட துணை செயலாளர் ஞானமாணிக்கம், சமவெளி இயக்க நிர்வாகி பழனி ராஜன், பூதலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள் பாஸ்கர், ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×