ஆனைமலையில் சிறுமியை கடத்தி திருமணம்

பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சிறுமிக்கு தாழி கட்டினார்.
ஆனைமலையில் சிறுமியை கடத்தி திருமணம்
Published on

கோவை, :

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (27). கூலி தொழிலாளி.

இருவரும் உறவினர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் அவர்களது காதல் சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு தெரிந்தது. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேரையும் கண்டித்துள்ளனர். அதன்பின்னர் சிறுமி கன்னியப்பனிடம் பேசுவதை குறைத்ததாக தெரிகிறது.

சமபவத்தன்று கன்னியப்பன் சிறுமியை கடத்தி திருமணம் செய்ய திட்டமிட்டார்.

இதையடுத்து அவர் சிறுமியை கடத்தி தம்மம்பதி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து சிறுமிக்கு தாழி கட்டினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சமூக நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சமூக நல அலுவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியை திருமணம் செய்த கன்னியப்பனை படித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com