search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தால் உடனடி தீர்வு
    X

    சேதமடைந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தால் உடனடி தீர்வு

    • கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.
    • சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக நகர்மன்ற தலைவர் செல்லத்துரையிடம் கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.

    இதனைதொடர்ந்து நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டபொறியாளர் ராஜன், ஆகியோர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

    சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் 1-வது வார்டு கவுன்சிலர் கலாவதி தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், 8-வது வார்டு கவுன்சிலர் அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×