search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  ஊர்க்காவல் படை   கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு
    X

    கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் உடல்தகுதி தேர்வு நடைபெறுவதை போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பார்வையிட்டார்.

    கடலூரில் ஊர்க்காவல் படை கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு

    • கடலூரில் ஊர்க்காவல் படை கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
    • கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஊர்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் உடற்தேர்வு இன்று கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆட்கள் தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடலோர காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை உடற்தேர்வு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், ஊர் காவல் படை துணை வட்டார துணைதளபதி கலாவதி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், ஊர் காவல் படை சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் காவல் அதிகாரிகள், ஊர் காவல் படை அதிகாரிகள் உடற்தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×