search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க செயற்குழு கூட்டம்
    X

    திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க செயற்குழு கூட்டம்

    • இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார் .இந்துமுன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் மணலி மனோகர், இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் டாக்டர் த.அரசுராஜா, நா.முருகானந்தம், மாநில துணை பொதுச் செயலாளர் சக்தி வேலன், மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, நெல்லை கோட்ட தலைவர் தங்கமனோகர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இந்து ஆட்டோ முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணி, செல்வகணேஷ்,மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்தர் மற்றும் ஆட்டோ தொழிலாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×