மாநில அளவிலான இறகு பந்து போட்டிக்கு ஹில்டன் பள்ளி மாணவர்கள் தேர்வு

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டிகளில் ஹில்டன் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Published on

தென்காசி:

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி தென்காசி எப்.ஆர்.சி. கிளப்பில் நடைபெற்றது. இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். ஜூனியர் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இஜாஸ் அகமத், இரட்டையர் ஆடவர் பிரிவில்இஜாஸ் அகமத், தன்னியநாதன் சூப்பர் சீனியர் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சங்கரேஷ் இரட்டையர் ஆடவர் பிரிவில் சங்கரேஷ், மாத்தேஸ் ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெ.ஜெ.வே. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com