மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய கோவையில் உதவி மையங்கள் தொடக்கம்

மகளிர் உரிமைத்தொகை கேட்டு 7.41 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர் கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்களின் தொடர்பு எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய கோவையில் உதவி மையங்கள் தொடக்கம்
Published on

கோவை,

கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 7.41 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்களுக்கு கடந்த 19-ந் தேதி முதல் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து குறுந்தகவல்கள் வர ஆரம்பித்து உள்ளது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இ-சேவை மூலமாக மேல் முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் கட்டணம் செலுத்த வேண் டும்.

ஆனால் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீட்டுக்கு கட்டணம் இல்லாமல் இலசவமாக மேல்முறையீடு செய்யலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு உதவ கோவை கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் அமைக்கப்பட்டது. இந்த உதவி மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்களை தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்களுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com