search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல்: 3-வது நாளாக போக்குவரத்து நெரிசலில் 5 கி.மீ. அணிவகுத்த வாகனங்கள்
    X

    அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

    கொடைக்கானல்: 3-வது நாளாக போக்குவரத்து நெரிசலில் 5 கி.மீ. அணிவகுத்த வாகனங்கள்

    • கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .
    • சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையிலும் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் புனித வெள்ளியை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் கோடைவெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாகவும் இங்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கொடைக்கானல் மலைச்சாலை முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைகளான வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலை , வெள்ளி நீர்வீழ்ச்சி பிரதான சாலை , ஏரிச்சாலை , அப்சர்வேட்டரி சாலை , செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 கி.மீ. வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து எறும்பு போல் ஊர்ந்து சென்றன . இதனால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர் . மேலும் சுற்றுலா பயணிகள் சில இடங்களில் நடந்து செல்லும் நிலை உள்ளது. கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் .

    பிரதான நெடு ஞ்சாலையில் சிறுசிறு கடைகளின் ஆக்கிரமிப்பு, கனரக வாகன ஆக்கிரமிப்பு போக்கு வரத்து இடையூறுக்கு காரணமாக உள்ளது. எனவே தொடர் விடுமுறை என்பதாலும், சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையிலும் கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை யாகவும் உள்ளது.

    Next Story
    ×