search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மற்றும் 2-ந் தேதி  கன மழை பெய்யும்
    X

    நாளை மற்றும் 2-ந் தேதி கன மழை பெய்யும்

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை மற்றும் வருகிற 2-ந் தேதியும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (31-ந் தேதி) மற்றும் 2-ந் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×