search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை: திருநங்கைகளுக்கு ரெயில்வே போலீஸ் எஸ்.பி. அறிவுரை
    X

    பயணிகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை: திருநங்கைகளுக்கு ரெயில்வே போலீஸ் எஸ்.பி. அறிவுரை

    • பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாக அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.
    • தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    சென்னை :

    சென்னை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாகவும் ரெயில்வேயின் உதவி மையத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.

    இந்த நிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி வியாசர்பாடி அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலில் நின்றபோது ரெயில் பயணியிடம் அடையாளம் தெரியாத 2 திருநங்கைகள் ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து, ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா மற்றும் சகிதா ஆகியோரை ரெயில்வே போலீஸ் எஸ்.பி.பொன்ராமு நேற்று நேரில் அழைத்து பேசினார். அப்போது சங்க உறுப்பினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராத வகையில் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார். தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    Next Story
    ×