ஹஜ் பயணிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை

இந்தியாவில் இருந்து ஆண்டு 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை செய்து எந்த ஒரு அரசு டாக்டரிடமும் உடல் தகுதி சான்றிதழை பெறலாம்.
ஹஜ் பயணிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை
Published on

சென்னை:

இந்தியாவில் இருந்து ஆண்டு 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஹஜ் விண்ணப்பதாரர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை செய்து எந்த ஒரு அரசு டாக்டரிடமும் உடல் தகுதி சான்றிதழை பெறலாம். இது நாடு முழுவதும் பரிசோதனை சான்றிதழ்களை பெறும் செயல் முறையை எளிதாக்கும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com