சிதம்பரம் அருகே கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை ெமயின்ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ். (வயது 48). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார்கள். போலீசார் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் துரைராஜை கைது செய்து அவர் எங்கிருந்து குட்கா வாங்கி வந்தார்.
சிதம்பரம் அருகே கடையில் பதுக்கிய  குட்கா பறிமுதல்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை ெமயின்ரோட்டை சேர்ந்தவர் துரைராஜ். (வயது 48). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார்கள். இவரது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுச்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அவரது கடையை சோதனைசெய்தனர்.அப்போது கடையின் பின்புறம் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் துரைராஜை கைது செய்து அவர் எங்கிருந்து குட்கா வாங்கி வந்தார். இதற்கு உடந்தையாக இருப்பது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com