search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.1.80 லட்சத்தை கொள்ளை அடித்த காவலாளி
    X

    அன்னூர் அருகே வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.1.80 லட்சத்தை கொள்ளை அடித்த காவலாளி

    • சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா குற்றவாளியை காட்டி கொடுத்தது
    • வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்

    கோவை,

    கோவை அருகே உள்ள அன்னூரை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 34). இவர் குன்னத்தூராம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் காசாளரான ஆனந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில் இவர் நிறுவனத்தில் வரவு, செலவுகளை பார்த்து வீட்டு மீதி இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கபோர்டில் வைத்து விட்டு சென்றார்.

    நள்ளிரவு நிறுவனத்தில் ஷட்டைரை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் யாரோ கபோர்டில் இருந்த பணத்தை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் நிறுவனத்தை திறக்க வந்த எலக்ட்ரிசீயன், ஷட்டர் உடைக்கப்பட்டு கபோர்டில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து நிறுவன மேலாளர் மோகன பிரியாவிற்கு தகவல் தெரிவித்தார்.அவர் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதே நிறுவனத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு காவலாளியாக வேலைக்கு சேர்ந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் (28) என்பவர் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை பார்த்த நிறுவனத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற காவலாளியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×