search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    தஞ்சையில் நாளை, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
    • தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகா லனி, நிர்மலாநகர், யாக ப்பாநகர், அருளான ந்தம்மா ள்நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகு மான்நகர், ரெட்டி ப்பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமா லைபுரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்ப ல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோ ட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடநகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×