search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்-10-ந் தேதி நடைபெறுகிறது
    X

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்-10-ந் தேதி நடைபெறுகிறது

    • தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
    • குறைகேட்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதம் 2-வது செவ்வாய்க் கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையிலும் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    எனவே, ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்படும் குறைகேட்பு முகாமிலும், மாவட்ட அளவில் ஜனவரி மாதம் 2-வது செவ்வாய்க் கிழமையான வருகிற 10-ந் தேதி தென்காசி, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடத்தப்படும் குறைகேட்பு முகாமிலும் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×