search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல லட்சம் மோசடி செய்த பட்டதாரி வாலிபர்கள் கைது
    X

    கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.

    பல லட்சம் மோசடி செய்த பட்டதாரி வாலிபர்கள் கைது

    • ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதை ெதாடர்ந்தும் பலமுறை சிறுகசிறுக மொத்தமாக ரூ.1,12,780 கட்டியுள்ளார்.
    • 100-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது36).

    மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்று கூறி செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் (லோன்) தருவதாக கூறியுள்ளார்.

    லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸி ங்குக்கு இன்ஸியல் தொகை யாக ரூ.8000-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார்.

    மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 அனுப்ப சொல்லியுள்ளார்.

    இதை த்தொடர்ந்து, பல செல்பேசி எண்களில் இருந்துபலர் மணிகண்டனைதொடர்பு கொண்டு கேட்டதையடுத்து, லோன் தொகை கிடைத்துவி டும் என்ற நம்பிக்கையில் பல தவணைகளாகமொத்தம் ரூ.67,880-ஐ வங்கிக்க ணக்கில் செலுத்தியுள்ளார்.

    ஆனால், மணிகண்டனுக்கு லோன் கிடைக்கவில்லை.

    இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத் தரும்படி கேட்டதற்கு மணிகண்டன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.10,000 கட்ட வேண்டும் என கேட்டு வாங்கியுள்ளனர்.

    அதன்பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதைத்தொடர்ந்தும் பலமுறை சிறுகசிறுக மொத்தமாக ரூ.1,12,780 கட்டியுள்ளார்.

    முடிவில் தான் முழுமையாக ஏமாந்ததும், தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பது தெரிந்த பின்னர் மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உத்தரவின் பேரில் தனி ப்படை அமைக்க ப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி முடிவில் காட்டுமன்னார் கோவிலில் பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில்அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையா ர்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெரு வைச் சேர்ந்த சஞ்சய் (22), சித்தார்த்தன் (20), கடலூர் மாவட்டம் காட்டும ன்னா ர்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம் (25) ஆகியோர் என தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப், ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட 16 செல்போ ன்கள், 28 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    மேலும், தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெ ருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மோசடி யில்பல்வேறு நபர்கள் ஈடுபட்டு ள்ளதாக வும் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிமுகம்இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவணங்களை கொடு க்கவோ, அறிமுகம் இல்லாத செல்போன் எண்கள் மூலம் லோன் கொடுப்பதாக கூறுவதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பறிமுதல் செய்த ஆவணங்களை மயிலா டுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தனிப்படை யினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, டி.எஸ்.பி வசந்தராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    Next Story
    ×