search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் காதல் விவகாரத்தில் பட்டதாரி பெண் தற்கொலை
    X

    கோவையில் காதல் விவகாரத்தில் பட்டதாரி பெண் தற்கொலை

    • காதல் விவகாரம் நேன்சியின் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை கணபதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் நேன்சி (வயது 23). பி.ஏ. பட்டதாரி.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் நேன்சியின் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.இந்த நிலையில் இளம்பெண் தனது பெற்றோரிடம் உடனடியாக தனக்கும், தன்னுடைய காதலனுக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார்.

    அதற்கு அவரது பெற்றோர் கொஞ்ச நாட்கள் பொறு, அப்புறம் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறியுள்ளனர். இதனால் நேன்சி கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி இளம்பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×