பழனியில் அரசு பள்ளி மாணவர்கள் வரைந்த அன்னை தெரசா ஓவியம்

பழனியில் அரசு பள்ளி மாணவர்கள் அன்னை தெரசா ஓவியம் வரைந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது
பள்ளி மாணவர்கள் வரைந்த அன்னை தெரசா ஓவியம்
பள்ளி மாணவர்கள் வரைந்த அன்னை தெரசா ஓவியம்
Published on

பழனி:

பழனி பெத்தநாயக் கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மெகா ஓவியம் வரைந்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

இப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர் 192 பேர் 18 அடி நீளம், 12 அடி அகலம் உள்ள ஓவியம் வரைந்தனர்.

பள்ளி மேடையில் வண்ணப் பொடிகளை பயன்படுத்தி, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி தொடங்கிய ஓவியத்தை 3 நாட்கள் வரைந்தனர்.

அன்னை தெரசா முகத்தை ஓவியத்தில் வடிவமைத்திருந்தனர். வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தலைமையாசிரியர் சரஸ்வதி முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com