search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்:   வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
    X

    கீழ்பாடியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

    கீழ்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழ்பாடியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., கழக செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் பெரு மாள், துரைமுருகன், பாரதி தாசன், அசோக் குமார், ரிஷிவந்தியம் ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணா துரை, கே.அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், அமிர்தம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×