தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

4 சதவீத அகவிலைப்படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலு வலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 4 சதவீத அகவிலைப் படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்,சி.பி.எஸ். ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்,சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரபடுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

மற்றும் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக மாற்றுவது, தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், அரசாணை 152-ஐ ரத்து செய்திடவும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com