search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே மூதாட்டியிடம்  தங்க நகை பறிப்பு
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டை அருகே மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த டேவிட் மனைவி சேவியர் அஞ்சல்மேரி (வயது 60). இவர் தனது 2 வது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நிலக்கோட்டை- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×