search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே  ஆடுகள் திருட்டு
    X

    சின்னசேலம் அருகே ஆடுகள் திருட்டு

    • அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.
    • மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த அழகரசன் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேச்சலுக்கு விட்டு முடித்துக் கொண்டு வழக்கம்போல் இரவு விவசாய நிலத்தில் உள்ள கொட்டாயில் கட்டி விட்டு அருகில் உள்ள இவரது வீட்டிற்கு தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது . இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் அனைத்து இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை. திருட்டு போன ஆடுகளின் மதிப்பு 40 ஆயிரம் என தெரிய வருகிறது.

    Next Story
    ×