search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை அருகே ஆடு திருட முயன்றதாக 2 பேர் கைது
    X

    திசையன்விளை அருகே ஆடு திருட முயன்றதாக 2 பேர் கைது

    • திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
    • கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்க புரத்தை சேர்ந்தவர் வேல். இவருக்கு சொந்த மான ஆடுகளை ஊருக்கு அருகில் உள்ள நம்பியாற்று கால்வாய் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு கள்ளிகுளம் சங்கர் (வயது 35), கீழ தேவநல்லூர் முருகன் (வயது 35) ஆகியோர் 2 ஆடுகளை கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.

    அப்போது அங்கு வந்த வேல் ஆடுகளை திருடி செல்வதை கண்டு கூச்ச லிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் சங்கர், முருகனை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட சங்கர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×